search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபல எழுத்தாளர்"

    குல்தீப் நய்யாரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பத்திரிகையாளர் சங்கத்தினர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். #RIPKuldeepNayyar #Modi #PresidentKovind
    புதுடெல்லி:

    நாட்டின் மிகச்சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், பிரபல எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக நிமோனியாவால் அவதிப்பட்டு வந்த இவர், அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் காலமானார். அவருக்கு வயது 95. அவரது உடல் நேற்று பிற்பகலில் டெல்லி லோதி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.



    குல்தீப் நய்யாரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பத்திரிகையாளர் சங்கத்தினர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் குல்தீப் நய்யாரின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

    பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்த குல்தீப் நய்யார், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தார். பத்திரிகையாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அவர் உருது, ஆங்கில மொழி பத்திரிகைகளில் சிறப்பாக பணியாற்றினார்.

    மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் மற்றும் சமூக விடுதலைக்கு போராடிய இவர் இந்தியா-பாகிஸ்தான் அமைதியை எப்போதும் வலியுறுத்தி வந்தார். இவர் இங்கிலாந்துக்கான இந்திய தூதராகவும், மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.  #RIPKuldeepNayyar #Modi #PresidentKovind 
    மூத்த பத்திரிகையாளரும் பிரபல எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 95. #RIPKuldeepNayyar
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் 1923-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பிறந்தவர் குல்தீப் நய்யார். பத்திரிகையாளராக தன் பணியைத் தொடங்கிய இவர் எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும் பிரபலம் ஆனார். குல்தீப் நய்யார் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். 'எல்லைகளுக்கு இடையே', 'தூரத்து உறவினர்கள்: துணைக் கண்டத்தின் கதை', 'நேருவுக்குப் பிறகு இந்தியா' மற்றும் 'ஸ்கூப்' போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள்.

    இடதுசாரி பார்வை கொண்ட அரசியல் விமர்சகரான இவர் மாநிலங்களைவை உறுப்பினராகவும், ஐ.நா அவையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில், 95 வயதான நய்யார், முதுமை சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  நிலையில் நேற்று இரவு அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  #RIPKuldeepNayyar
    வங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சுவை மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 நபர்கள் சுட்டுக் கொலை செய்தனர். #Bangladesh #ShahzahanBachchu
    டாக்கா:

    வங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு (வயது 60). இவர் பிஷாகா புராக்காசோனி என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். மதசார்பற்ற கொள்கைகள் பற்றி துணிச்சலுடன் தனது கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் தனது பூர்வீக கிராமமான ககால்டியில் இருந்தார். அங்கு அவர் நோன்பு திறப்புக்கு முன்பாக ஒரு மருந்துக்கடைக்கு, தனது நண்பர்களை சந்திப்பதற்காக சென்று இருந்தார்.

    அப்போது அங்கே 2 மோட்டார் சைக்கிள்களில் 5 நபர்கள் வந்தனர். அவர்கள் ஷாஜகான் பாச்சு இருந்து கொண்டிருந்த மருந்துக்கடையின் மீது கச்சா வெடிகுண்டுகளை வீசினார்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து அவர்கள் மருந்துக்கடையில் இருந்த ஷாஜகான் பாச்சுவை தரதரவென்று வெளியே இழுத்து வந்தனர். அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிவிட்டு அங்கு இருந்து தப்பினர்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனார்.

    இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. மதசார்பற்ற கொள்கைக்கு அவர் ஆதரவாக பேசி வந்ததால் பல முறை அவருக்கு மத அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர் அங்கு விரைந்து, ஷாஜகான் பாச்சு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட ஷாஜகான் பாச்சு, வங்காளதேச கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆவார்.

    வங்காளதேசத்தில் மதசார்பின்மைக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள், எழுதுகிறவர்கள், வலைத்தள பதிவாளர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.  #Bangladesh #ShahzahanBachchu #tamilnews 
    ×